வயதுவந்தோர் கல்வி இயக்கம்தமிழ் நாடு அறிவியல் இயக்கம். கிருஷ்ணகிரி பள்ளிக்கல்வித்துறை முறைசாராக் கல்வி மற்றும் - BRC KRISHNAGIRI .
கிருஷ்ணகிரி ஒன்றியம்
குர கலைக்குழு
(புதுக்குரல் கலைக்குழு 26.09.2021)
நமது மதிப்பிற்குரிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் நமது மாவட்டம் முழுவதும் சமூக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது . இன்று (26.09.2021)
காலை 10.00 முதல் 11.00 மணி வரை பஸ் நிலையம் அண்ணா சிலை முன்பும் மாலை 1.00 முதல் 2.00 மணி வரை பழையபேட்டை காந்தி சிலை முன் நடைபெறும் . இந்நிகழ்ச்சியில் இளமைத் திருமணத்தினால் ஏற்படும் பாதிப்புகள், கல்வியின் அவசியம் மற்றும் கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வயது வந்தோர் கல்வி ஆகிய கருத்துகளை மையமாகக் கொண்டு ஆடல், பாடல், கதைகள் மற்றும் தப்பாட்டம் மூலம் சமுதாய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு வருகைதந்த கலை குழு மிக சிறப்பாக நிகழ்ச்சி நடத்தினார்கள், நிகழ்ச்சி நடைபெற சிறப்பாக சார்ந்த தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர் .இந்நிகழ்ச்சி யில் மேற்பார்வையாளர் பொ, ஆசிரியர் பயிற்றுநர்கள் ,ஆசிரியர் கள்,ஊர்பொது மக்கள் ,தன்னார்வலர்கள், அறிவியல் இயக்கம் சார்பில் பொறுப்பாளர்கள்
மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர், விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.
பள்ளிக்கல்வித் துறையின் கற்போம் எழுதுவோம் இயக்கம் சார்பாக நடந்த கிருஷ்ணகிரி மாவட்ட அளவிளான சமுதாய விழிப்புணர்வு கலைத் திருவிழாவில் கிருஷ்ணகிரி புதுக்குரல் கலைக்குழு நடத்திய கலை நிகழ்வுக்கு நமது வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி.மரியரோஸ் அம்மா அவர்களும் வட்டார வளமைய பொறுப்பு மேர்பார்வையாளர் திரு.சீனிவாசன் அவர்களும் ஆசிரியர் பயிற்றுனர்களும் ஆசிரியர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்





























Comments
Post a Comment